NEWS

பல்கலை. வெட்டுப் புள்ளிகள் அடுத்த மாத முற்பகுதியில்
கொழும்பு
, மே 24, 2010
கடந்த வருடம் ஓகஸ்ட் மாதம் நடை பெற்ற ஜி.சீ.ஈ. உயர்தரப் பரீட்சையில் தோற்றியோருக்கான பல்கலைக்கழக வெட்டுப்புள்ளிகள் அடுத்த மாத முற் பகுதியில் வெளியாகும் என்று அறிவிக் கப்பட்டிருக்கிறது.
பெறுபேறுகளை மீளாய்வு செய்வதற்காக விண்ணப்பித்தவர்களுக்கான புதிய பெறுபேறுகள் நேற்று வெளியாக இருந்தன. இதனையடுத்தே, வெட்டுப்புள்ளி களை அறிவிப்பதற்கான நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன என்று பல் கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு வின் தலைவர் பேராசிரியர் காமினி சமர நாயக்க தெரிவித்தார்.


தவணைப் பரீட்சைகள் பாடசாலை மட்டங்களில்
கொழும்பு,
மே 20, 2010
நாட்டின் அரசப் பாடசாலைகளில் கல்வி பயிலும் மாணவர்களுக்கான வருடாந்த தவணைப் பரீட்சைகளை பாடசாலை மட்டத்தில் நடத்துவதற்கு கல்வியமைச்சு தீர்மானித்துள்ளது.
கடந்த காலங்களில் பாடசாலை தவ ணைப் பரீட்சைகளை ஒழுங்கு செய்யும் போது எதிர்நோக்கப்பட்ட பிரச்சிணைக் கருத்திற் கொண்டு இந்தத் தீர்மானம் மேற் கொள்ளப்பட்டுள்ளதாக கல்வியமைச்சு தெரிவித்துள்ளது.
இதன் பிரகாரம் குறிப்பிட்ட பாடசாலையில் கல்வி பயிலும் மாணவர்களுக்கான முதலாம், இரண்டாம், மூன்றாம் தவணைப் பரீட்சைகள் யாவும் அந்தந்த பாடசாலைகளிலேயே நடத்தப்படவுள்ளன.
ஒவ்வொரு பாடசாலைகளிலும் தவணைப் பரீட்சைக் குழு ஒன்று அமைக்கப்பட்டு, தேர்ச்சி பெற்ற சிரேஷ்ட ஆசிரியர்களின் ஒத்துழைப்புடன் பாடசாலை ரீதியாக வினாத்தாள் தயாரிக்கப்பட்டுள்ளன.
இவ்வாறு தயாரிக்கப்படும் வினாத்தாள்கள் உரிய நியமங்களையும், பண்பு சார் தரத்தினையும் கொண்டிருப்பதை அதிபர்கள் உறுதிப்படுத்திக் கொள்ள வேண்டும் எனவும் கல்வியமைச்சு வலியுறுத்தியுள்ளது.
தவணைப் பரீட்சை வினாத்தாள் அச்சிடும் நடவடிக்கைகளுடன் தொடர்புடைய செலவினங்களை மேற்கொள்வதற்காக பாடசாலை அபிவிருத்திச் சங்க நிதி அல்லது பாடசாலை மேம்பாட்டு நிதியினைப் பயன்படுத்துவதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளதாகவும் கல்வியமைச்சு குறிப்பிட்டுள்ளது.