க.பொ.த. உயர்தர பரீட்சைக்குத்தோற்றவிருக்கும் மாணவர்களுக்கான பிராந்திய (மட்டக்களப்பு) மட்டத்திலான மாபெரும் இறுதி வழிகாட்டல் கருத்தரங்கு - 2010
அஸ்ஸலாமு அலைக்கும்,
எமது தாருல் கைர் இளைஞர் முன்னணியால் பல்கலைக்கழக மாணவர்களைக்கொண்டு வருடம்தோறும் கணித, உயிரியல் பிரிவு மணவர்களுக்கென நடாத்தப்பட்டு வரும் பரீட்சை தொடர்களும், அதற்கு பின்னராக நடைபெறும் இறுதி கருத்தரங்கும் யாவரும் அறிந்தவையே... வழமை போன்று இம்முறையும் 2010 இல் A/L பரீட்சைக்கு தோற்றவிருக்கும் மாணவர்களுக்கான பிராந்திய மட்டத்திலான இறுதிக்கருத்தரங்கு பல்கலைக்கழக மாணவர்களை கொண்டு எதிர்வரும் 23, 24 ம் திகதிகளில் அதாவது சனி, ஞாயிறு ஆகிய தினங்களில் நடாத்துவதற்கு திட்டமிட்டுள்ளது. இம்முறை காத்தான்குடி மத்திய மகா வித்தியாலயம்,மட்/மீரா பாலிகா மகா வித்தியாலயம், ஏறாவூர் அலிகார் தேசிய பாடசாலை, வாழைச்சேனை அந்-நூர் தேசிய பாடசாலை ஓட்டமாவடி மத்திய கல்லூரி என்பன கலந்து சிறப்பிக்கவிருக்கின்றன. ஆர்வமுள்ள மாணவர்கள் சமூகமளித்து பயன் பெறுமாறு தாருல் கைர் இளைஞர் முன்னணி வேண்டிக்கொள்கிறது.
Subjects: Physics, Chemistry
இடம் : பரீட் மண்டபம், காத்தான்குடி மத்திய மகா வித்தியாலயம்( தேசிய பாடசாலை )
காலம் : 8.00 AM - 4.00 PM ( Saturday, Sunday)
Lunch Break(1.00 PM - 2.00 PM)
மேலதிக விபரங்களுக்கு, 077-8468522 என்ற கைத்தொலைபேசி இலக்கத்தை தொடர்பு கொள்ளவும்
No comments:
Post a Comment